30 JUNE 2018
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவர் முன்னிலையாகக்கூடும் என பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார்.
வடமேல் அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்ட அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தலைமைத்துவத்தை புதிய ஒருவருக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் கட்சியின் தலைவரிடம் உள்ளது.
அதற்கான செயற்பாடுகளை அவர் முன்னெடுக்கிறார்.
தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்களால் நாட்டின் தலைவரை உருவாக்க முடியாது.
எதிர்காலத்திலும் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார் என பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment