Tuesday, June 26, 2018

ஐ.நாவில் சிங்கள பிரதிநிதிகளை ஓட ஓட விரட்டிய தமிழர்கள்


June.26.2018

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அறையில் இடம்பெற்ற கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொண்டிருந்த சிங்கள பிரதிநிதிகளை தமிழர்கள் விரட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இதன் பக்க அறையில் கூட்ட தொடர் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது சிங்கள பிரதிநிதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

அத்துடன் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் “நீங்கள் கொலைகாரர்கள்” என தெரிவித்தது அங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பலர், சிங்கள பிரதிநிதிகளை வெளியில் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilwin

0 comments:

Post a Comment