Monday, June 25, 2018

அரசியல் கட்சி செயலாளர்களை சந்திக்கிறார் மஹிந்த

June 26, 2018

அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும் இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தேர்தல்கள் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு சுற்றுக்களாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் சுற்று பாராளுமன்றத்தை பிரிதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும் இடையில் இடம்பெற உள்ளது.

அதன் பின்னர் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் மஹிந்த தேஷப்பிரியவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.

இதன்போது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதுதவிர தற்போது இருக்கின்ற வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளது.

0 comments:

Post a Comment