Thursday, June 28, 2018

மாகாணசபை தேர்தலை துரிதமாக நடத்துவதில் பொது இணக்கப்பாடு

மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கான பொது இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழவின் தலைவர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மாகாணசபைத் தேர்தலை பழைய மற்றும் புதிய முறைகளின் கீழ் நடத்துவது பற்றியும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும், இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது தெரிவித்தார்.
இதன்போது தெரிவிக்கப்படும் கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளுமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழவின் தலைவரிடம் சபாநாயகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment