Friday, June 29, 2018

மனைவி வெளிநாட்டில்! மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாடு


30.06.2018

திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 9ம் கட்டை, சூரியபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அயல் வீட்டிலுள்ள பதின் மூன்று வயதுடைய சிறுமியொருவரை சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment