Wednesday, June 27, 2018

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, ஐக்கிய தேசிய கட்சியியில் பலர் தகுதியுடன் உள்ளனர்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு பலர் உள்ளதாக ஐக்கிய 
தேசிய கட்சியின் நாடாமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணி தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ராஜபக்ஷ குடும்பத்தினரையே நம்பியுள்ளனர்.

எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாக விரும்பாத பட்சத்தில், தமது கட்சியின் சார்பில் பலர் போட்டியிடும் தகுதியில் உள்ளதாகவும் துஷார இந்துனில் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment