Wednesday, June 27, 2018

நாடு பூராகவும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

.நாடு பூராகவும் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் இடைக்கிடை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் ஹம்பாந்தொடை தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகரித்து வீச கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரை கடற் பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Hirunews


0 comments:

Post a Comment