Friday, June 29, 2018

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

29 JUNE 2018

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பா. டெனீஸ்வரனுக்கு அவர் வகித்த அமைச்சுப் பதவிகளை உடனடியாக மீள வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு, பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து சீ.வி.விக்னேஸ்வரன் விலக்கி இருந்தார்.

இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் உயர் நீதிமன்றில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதன்போது அவர் வகித்த அமைச்சுப் பதவிகளை மீள அவரிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த விபரங்களை பா.டெனீஸ்வரன் எமது செய்தி சேவைக்கு வழங்கினார்.

Hirunews

0 comments:

Post a Comment