30.06.2018
பிரித்தானியாவில் பணிக்கு சென்ற நிலையில் அங்கேயே வாழும் பிற நாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்ற சமீபத்திய அறிவிப்பை மீளப் பெறும் திட்டமில்லை என பிரித்தானிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
பிரித்தானியா குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளை சமீபத்தில் மிகவும் கடுமையாக்கியது.
இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து பிரித்தானியாவில் வேலை செய்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரித்தானியாவில், உயர் பணிகளில் இருக்கும், வைத்தியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து பிற நாடுகளில் இருந்து பிரித்தானியாவில் குடியேறியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய பிரசாரம் ஒன்றை மேற்கொண்டனர்.
பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை மீளபெற வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, குடியுரிமை விதி குறித்து மீள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு குடியுரிமை அமைச்சர் கரோலின் நோக்ஸ்,
“அந்நிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவில் பணி புரிபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பில் மாற்றம் ஏதும் இல்லை” என அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment