Monday, June 25, 2018

பாதாள குழு உறுப்பினர்களிடம் உள்ள துப்பாக்கிகள் தொடர்பில் வௌியான தகவல்!!

,

25 JUNE 2018

பாதாள குழு உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில துப்பாக்கிகள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் , அது அவர்களுக்கிடையில் பரிமாற்றப்படுவதாகவும் தற்போதைய நிலையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி தெரியவந்துள்ளது.

காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த துப்பாக்கிகள் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் , இத்த விடயம் தொடர்பில் தற்போது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று இரவு முதல் இன்று காலை வரை இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இரத்மலானை - சக்கின்தாராம வீதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ அதிகாரியொருவர் படுகாயமடைந்திருந்தார்.

உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றிருந்தனர்.

அதேபோல், நேற்று இரவு கொழும்பு - ஜம்பட்டா விதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hiru News


0 comments:

Post a Comment