Wednesday, January 2, 2019

பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் முடக்கம்


January 3, 2019

கடும் பனிமூட்டம் மற்றும் சீரற்ற வானிலை காரணமாக டெல்லி விமான நிலைய நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணி முதல் புறப்பட தயாராகவிருந்த அனைத்து விமானங்களும் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தோடு டெல்லிக்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக, பயணம் செய்யவேண்டிய விமானத்தின் நிலவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலை சீரடைந்ததும் விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 12 ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகின்றமையால், கடந்த சில தினங்களாகப் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment