January 15, 2019
பாதாள உலக குழுக்களுக்கு தலைதூக்க இடமளிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதாள உலக குழுக்களை சில அரசியல்வாதிகளே பாதுகாப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலிஸார் இந்த பாதாள உலக குழுக்கள் தொடர்பில் இதனை விடவும் செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கேட்டுள்ளார்.
சில பொலிஸார்கள் கூட பாதாள உலக குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு உதவி வழங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கைக்கு கேரலா கஞ்ஜா பாரியளவில் கடத்தப்படுவதாகவும், இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசியல்வாதிகள் அபயம் அளித்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment