Wednesday, January 16, 2019

ஜனாதிபதி நம்பிக்கை நிதிய காரியாலயம் புதிய இடத்துக்கு


January 16, 2019

ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் அமைந்துள்ள காரியாலயம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தற்பொழுது கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, ரேணுகா கட்டிடத் தொகுதியில் இல.41 இல் அமைந்துள்ள இந்தக் காரியாலயம் எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய காரியாலயம் கொழும்பு 10, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத் தொகுதியின் 03 ஆவது மாடி, இல. 35 இல்  அமையப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்துக்கு வருகை தருபவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. 


0 comments:

Post a Comment