Sunday, January 13, 2019

ஸ்ரீ ல.சு.க. தொகுதி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி விசேட அழைப்பு

January 13, 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 4  மாகாணங்களிலுள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு உடன் கொழும்புக்கு வருமாறு இன்று (13)அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊவா, வட மத்திய, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அமைப்பாளர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ல.சு.க. அறிவித்துள்ளது.

இந்த தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று (13) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயமொன்று அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான குழு தெரிவித்துள்ள நிலையில் இன்றைய கூட்டம் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment