Tuesday, January 15, 2019

புதிதாக அறிமுகம் செய்த காபன் வரியை அரசாங்கம் நீக்க வேண்டும்- தனியார் பஸ் சங்கம்

January 16, 2019

காபன் வரி அறவிடும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை உடன் மாற்றிக் கொள்ள வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அரசாங்கம் இதுவரையில் அறிமுகம் செய்த புதிய விடயங்களில் பாரிய பிரச்சினையுள்ளது இதேபோன்ற ஒரு அம்சமாகவே இந்த காபன் வரி காணப்படுகின்றது.

எரிபொருள் சூத்திரம் என்று ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. அதில் இந்த வரியை சேர்த்திருக்கலாம்.
தனியாக காபன் வரி என்ற ஒன்று அவசியமற்றதாகும். வீட்டில் பயணங்களுக்கு பயன்படுத்தாது நிறுத்தி வைத்துள்ள வாகனங்களுக்கும் இந்த வரியை அறவிடுவது நியாயமான ஒன்றா? என்பதை அரசாங்கத்துக்கு  இவ்வரி தொடர்பில் ஆலோசனை வழங்கிய அதிகாரிகள் கருத்தில் கொள்ளாதது ஏன் எனவும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment