Sunday, January 6, 2019

ஹிஸ்புல்லாவின் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புமாறு கோரிக்கை

06 Jan, 2019

பாராளுமன்ற உறுப்பினர்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவி விலகியதை அடுத்து, ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்திற்குத் தகுதியானவரைப் பரிந்துரைக்குமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பிலான கடிதத்தை நாளைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் தேர்தல் பணிப்பாளர் நாயகம்
எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா பதவி விலகியதையடுத்து, அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் நிலவியுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளரினால் கடந்த வௌ்ளிக்கிழமை கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவினால், பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியானவர் என பெயரிடப்பட்டதுடன், வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதை அடுத்து, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment