09.01.2019
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் புதிதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பி.டீ.சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடனர்
இதனுடன், மேல்நீதிமன்றத்தின் நீதிபதி கே.பி.பெர்னாண்டோ புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
0 comments:
Post a Comment