05.01.2019
மஹிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சித் தலைவர் எனும் தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென தெரிவிக்கிறார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
கட்சித் தலைவர்களுடன் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில் மனோ கணேசன், ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும், எதிர்க்க விரும்புபவர்கள் நீதிமன்றை நாடி அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும்படி கூறி தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment