Saturday, January 5, 2019

சமையல் எரிவாயுவின் விலையை 359 ரூபாவால் அதிகரிக்க அனுமதி கோரல்

January 5, 2019

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான வேண்டுகோள் சமையல் எரிவாயு கம்பனிகளினால் நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 359.00 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் ஒருமுறை மேற்கொள்ளும் விலை மறுசீரமைப்பிற்கு ஏற்ப இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும், இந்த வேண்டுகோளுக்கு நுகர்வோர் அதிகார சபை இதுவரையில் அனுமதி வழங்க வில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது

0 comments:

Post a Comment