Sunday, January 13, 2019

நாமல் குமாரவை கைது செய்ய பொலிஸ் முஸ்தீபு ?


January 13, 2019

ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரை கொலை செய்ய சதி இடம்பெற்றதாக தகவல் வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்புக்கான தேசிய அமைப்பின் பணிப்பாளர் ராமல் குமார என்பவரை விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் வட்டாரங்கள் கூறியுள்ளன.
நாமல் குமாரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பல சாட்சிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இவர் திகன சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியாக கூறப்பட்ட அமித் வீரசிங்கவுடன் நட்புக் கொண்டிருந்த காலத்தில் இடம்பெற்ற பல ஒலிப்பதிவு சாட்சிகளையும் ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment