15.01.2019
மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
வெளிநாட்டுகளில் இருந்து வருபவர்கள் மூலமே குறித்த நோய் இலங்கையில் பரவுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக, சுகாதார அமைச்சின் மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் வாரக்காலப்பகுதியில் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் மலேரியா நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
பின்னர் அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தமை தெரியவந்தது.
அதன்பின்னர் 2 வாரக்காலத்தில், ஸ்ரீ ஜயவர்தன புர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்க மலேரியா இருப்பது தெரியவந்தது.
குறித்த நபர் சியம்பலாண்டுவ பகுதிக்கு சென்று வந்ததாக, வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சியம்பலாண்டுவ பகுதியில், மலேரியா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படும், வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், தற்போது இலங்கையில் மலேரியா நோய் தொற்று பரவுவதற்கான நிலைமை இருப்பதாக, வைத்தியர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மலேரியா நோய் தொற்று முற்றாக ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
எனவே இந்த நோய் தொற்றுக்கு காரணமாகும், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களை சுகாதார பரிசோதனைக்கு உற்படுத்த வேண்டும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மலோரியா குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment