January 16, 2019
மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
வட மத்திய, சப்ரகமுவ, ஊவா ஆகிய மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. தமது கட்சி தேர்தல் வேண்டாம் என்பதற்கு நீதிமன்றம் செல்லவில்லையெனவும், தேர்தலை நடாத்துமாறு கோரியே நீதிமன்றம் செல்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment