Saturday, January 12, 2019

காவல்துறை அதிகாரிகளுக்கான விசேட அறிவிப்பு


12.01.2019

காவல்துறை அதிகாரிகள் தொழில்ரீதியாக முகம்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் தங்களுக்கு அறியப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரிவு தெரிவித்துள்ளது.

011 2 88 72 38 அல்லது 011 2 88 77 56 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கு கூறுங்கள் என்ற தகவல் பிரிவின் 011 2 88 74 74 என்ற இலக்கத்திற்கோ அழைத்து தங்களது பிரச்சினைகளை முன்வைக்க முடியும்.

அத்துடன், காவல்துறை அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் விசேட சந்திப்பொன்று இந்த மாதம் 24 ஆம் திகதி பத்தரமுல்லை – சுஹூருபாயவில் உள்ள சட்டம் ஒழுங்குகள் தொடர்பான துறையின் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் பிரதான எச்.எம்.பீ ஹிட்டிசேன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், ஜனாதிபதி செயலணி பிரதானியின் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment