January 16, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (15) பிலிப்பைன்ஸ் பயணமாகியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது 6 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) விற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (16) இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment