January 14, 2019
நாட்டில் அடுத்துவரும் தேசிய தேர்தல் ஒன்றின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும், பொதுஜன பெரமுனவிலிருந்தும் மக்கள் எதிர்பாராத தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வந்து இணைந்துகொள்வார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
யாப்பகுவ தொகுதியின் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இக்கூட்டம் மஹவ நகர மண்டபத்தில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அக்கட்சிகளிலுள்ள பலர் தம்முடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர். தேசிய மட்ட தேர்தல் ஒன்று வரும்போது எம்முடன் வந்து அமர்ந்து கொள்வார்கள் எனவும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment