Sunday, January 6, 2019

வட மாகாண ஆளுநராகத் தமிழர் ?


January 7, 2019

வட மாகாண ஆளுநராகத் தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கலாநிதி விக்கினேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமள் ஆகியோரின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

என்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பம் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநராகப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
இன்னும் சில தினங்களுக்குள் வட மாகாணம் உட்பட ஏனைய நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment