Friday, January 11, 2019

அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை


January 11, 2019

மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர, மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுடைய ஒருவர், ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளமை ​குறித்து தமக்கு நம்பிக்கையில்லையெனத் தெரிவித்தே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

மேல் மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றும் வகையில், இருதரப்பும் கலந்துரையாடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி

Daily ceylon

0 comments:

Post a Comment