Sunday, January 13, 2019

பகுதிநேர வகுப்புகளை நடத்துவதற்கு தடை ?


January 13, 2019

காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான பாடசாலை நேரகாலத்தில் பகுதிநேர வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு போன்ற பகுதிகளில் பாடசாலை நேரகாலத்தில் மாணவர்கள் பகுதிநேர வகுப்புகளுக்கு செல்கின்றனர்.

இதன் காரணமாக வௌவேறு நட்புகள் ஏற்பட்டு புதிய கலாசாரங்கள் உருவாகி, இறுதியில் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுகின்றன.

எனவே, பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானித்து, அவர்களை சரியான பாதையில் முன்னோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

0 comments:

Post a Comment