Sunday, January 13, 2019

அடுத்து வருவது மாகாண சபைத் தேர்தல் – ஶ்ரீலசுக

13 Jan, 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு இன்று அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அடுத்த தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment