January 11, 2019
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அதற்கு எதிராக மாகாண முதலமைச்சர் ஒருவரின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவினருக்கும், அரசியல் கட்சி அங்கத்தவர்களுக்கு இடையில் இன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேக்கர இதனை தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதை துரிதப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சித் தலைவர்களை அறிவுறுத்துவதற்கும் இந்த சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment