Monday, January 7, 2019

இறக்காமம் சந்தியில் திடீரென முளைத்த கம்பிவேலி

08.01.2019 ( படங்கள்)

இறக்காமம் சுற்றுவட்டம் சந்தியில்  நேற்று இரவு திடீரென கம்பிவேலி ஒன்று முளைத்ததால் மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர் இறக்காமம் காபட் வீதி தொடர்பாக தினம் தினம் பல சர்ச்சைகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இவ்வீதியானது
குறுகிய மூன்று கிலோமீட்டர் பாதையை இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் செப்பனிடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு பல அழுத்தங்களுக்கு மத்தியில் தற்போது குறித்த காபட் வீதி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன

அதேநேரம் இவ்வீதியில்   சுற்றுவட்டம் அமைக்க ஒரு பக்கம் தடையாக இருந்த கட்டிடங்கள் இறைச்சிக் கடை , கோழிக் கடை , வாழப்பழக்கடை ஹோட்டல், கொமினிகேசன், ஆகியகடைகள் உடைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் ஏனைய கட்டிடங்கள் இன்னும் உடைக்கப்படாமல்
பிரதேச சபை பக்கச்சார்பாக செயல்பட்டு இழுத்தடிக்கப்பட்டு வருவதாக இப்பிரதேச மக்கள் பிரதேச சபையை குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இதன் காரணமாகவே குறித்த வளவுக்கார்கள் தங்களது வவுகளை கம்பி வேலி போட்டு அடைத்துள்ளனர் அத்தோடு ஒரு வருடத்துக்குரிய நஷ்டஈடு ஒன்றையும் பெற்று தரவேண்டுமென்று பிரதேச சபையை வேண்டி நிக்கின்றனர்.

எது எவ்வாறாக இருப்பினும் எதிர்கால சந்ததிகளுக்காக இந்த ஊரை அழகு படுத்தும் நோக்கில் பிரதேச சபை சுற்றுவட்டம் ஒன்றை அமைக்க தடையாக இருக்கும் கட்டிடங்களை உடைத்து இப்பாதையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் இதனூடாக சபைக்கு கோரிக்கை விடுக்கின்றனர்

0 comments:

Post a Comment