January 9, 2019
சவுதியின் தமாம் நகரிலிருந்து மக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அதிக வேகத்தின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வாகனத்தை ஓட்டிச் சென்றவர் மற்றும் அவரது மனைவிமார் இருவர், மகன் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வாகனத்தில் சென்ற மற்றும் நான்கு பெண் பிள்ளைகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment