Tuesday, January 15, 2019

ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிப்பு

January 15, 2019

தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச்.ஏ.ஹலீம், சவுதி அரசாங்கத்தின் ஹஜ் விவகாரங்களுக்கு பொருப்பான அமைச்சர் உள்ளிட்ட குழுவுடன் நேற்று நடாத்திய பேச்சு வார்த்தையின் பயனாக இம்முறை இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்,

கடந்த வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற ஹஜ் கோட்டாவின் தொகை 3000 க்கு அன்மித்த தொகையாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment