Monday, June 25, 2018

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள முடிவு

25 JUNE 2018

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்கின்ற அனைவரையும் உடனடியாக நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவை மீண்டும் பலமான நாடாக மாற்றுகின்றவர்களே அங்கு தேவைப்படுகின்றனர்.

அவ்வாறின்றி சட்டவிரோதமாக எல்லைக் கடந்து வந்த யாரையும் நீதி நடவடிக்கைகளுக்கு அப்பால் உடனடியாக நாடுகடத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஏதிலிகளாக பிரவேசிக்கின்ற பெற்றோரிடம் இருந்து அவர்களின் பிள்ளைகளை பிரிக்கும் வகையில் அவர் அமுலாக்கி இருந்த குடிவரவுத் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியான நிலையில், அந்த சட்டம் அண்மையில் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment