27-1 | .2018
எதிர்வரும் மாதம் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புக்களை நடாத்துதல் ,வழிக்காட்டல் மற்றும் மாதிரி வினாத்தாள் விநியோகித்தல் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி எந்தவொரு நபரோ நிறுவனமோ செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு செயற்படும் நபர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 உடனடி அழைப்பு பிரிவிற்கு அல்லது காவற்துறை தலைமையகத்தின் 0112 421 111 என்ற இலக்கத்திற்கு அல்லது 119 காவற்துறை அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும்.
சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மாதம் 12ம் திகதி நிறைவடையவுள்ளது.
0 comments:
Post a Comment