Friday, November 30, 2018

அம்பாறை - உகன பிரதேச பாடசாலை மாணவர்கள் 03 பேர் கைது


30.11.2018

அம்பாறை - உகன பிரதேச பாடசாலை மாணவர்கள் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிதி வண்டி சங்கிலிகளை கொண்டு சென்றுள்ள போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்கள் இம் முறை சாதாரண தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபரினால் காவற்துறைக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கமைய குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மோதல் சம்பவம் ஒன்றிற்காக இவ்வாறு மிதி வண்டி சங்கிலிகளை கொண்டு வந்துள்ளதுள்ளமை அறியவந்துள்ளது.

இந்நிலையில் காவற்துறையினால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment