Friday, November 30, 2018

ஹொரவ்பொத்தானை பாலமொன்றை சோதனையிட்ட காவற்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

30 NOVEMBER 2018

ஹொரவ்பொத்தானை, அளுத்ஓயா வீதி யான் ஓயா பாலத்துக்கு அருகில் இன்று (30) ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கெப்பிட்டிகொல்லாவ விஷேட காவற்துறை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதியை சோதனையிட்டபோது 56 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் டீ 56 எல் எம் ஜி தோட்டாக்கள் டி 56 துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் எல் எம் ஜி ரம்ஸ் எமோ பெல்ட் ஏனைய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

கெப்பிட்டிகொல்லாவ விசேட காவற்துறை அதிரடிப்படை பொறுப்பதிகாரி டிஎம்கே திசாநாயக்க அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட ஆயுதங்களை காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இன்றைய தினம் கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை காவற்துறையினர் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment