30.11.2018
சபாநாயகரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினமும் ஆளுங்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர்.
அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல் , ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டமொன்று தற்போதைய நிலையில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டமொன்று இன்று காலை இடம்பெற்றிருந்தது.
அமைச்சரவையின் நிதி உரிமையை சவாலுக்கு உட்படுத்தும் யோசனையொன்று எதிர்க்கட்சியால் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment