Tuesday, November 27, 2018

ஸ்ரீ ல.சு.க.யின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

November 28, 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடொன்று எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் அக்கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. முழு நாட்டிலுமுள்ள கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை இம்மாநாட்டில் கூட்டவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment