Saturday, November 24, 2018

முகா தலைவர் சகோ, ஹக்கீம் அவர்களுக்கோர் அவசரக் கடிதம்...!

24.11, 2018

சகோதரனே...
நமது நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது பெரும் பான்மை இனத்தவர்களின் பிரதமர் நாற்காலிக்கான அதிகாரப் போட்டியே அன்றி..
எமது சமுகத்திற்கான உரிமை,உடமை போராட்டமல்ல
நீங்கள் சீற்றமும் சினமும் கொண்டெழுவதற்கு...
இப்பிரச்சினையை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...
நீங்கள் ஒருவருக்கு ஆதரவாக இருப்பதென்றால் எல்லோரையும் போல் இருந்து விட்டுப் போங்கள்...

அதை விடுத்து தயவு செய்து வருகின்ற வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து இப்பிரச்சினையில் சர்வதேசம் தலையிடும் படி நீங்கள் வேண்டிக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்...
இவைகள் சிங்களப் பத்திரிகைகளில்
செய்தித் தலைப்பாகவும், துல்லியமாகவும் மிக உண்ணிப்பாகவும் காரசாரமாகவும்
மெருகூட்டப் பட்டு எழுதப் படுகின்றது..

இவ்வாறான உங்களின் நடவடிக்கை நாட்டிற்கு மட்டுமல்ல எனது சமுகத்திற்கும் உகந்ததாக தெரியவில்லை...
நண்பன் ரணிலுக்கு உதவி செய்வதாக நினைத்து எனது சமுகத்திற்கு வரலாற்றுத் துரோகத்தை செய்ய முற்படாதீர்கள்...

உங்களின் இவ்விதமான தான்தோற்றித் தனத்தினால் எனது சமுகத்திற்கு தேசத் துரோக பட்டம் வழங்கி எம் இனத்தை பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னும் பல இனவாத சிங்கள சேனாக்களை உருவாக்கி இச்சமுகத்தின் இருப்பை கேட்விக்குறியாக்கி விடாதீர்கள்...

உங்கள் காலைப் பிடித்து கெஞ்சுகின்றேன் பாவம் எனது சமுகம்...
கருனை காட்டுங்கள்....
காபீர்களிடமிருந்து எம் சமுகத்தை பாதுகாப்பதை விடவும் உங்களிடமிருந்து பாதுகாப்பதுதான் மிக மிகக் கடினமான விடயம் என நினைப்பதுடன்...
அல்லாவுக்காக
எம் சமுகத்தை நிம்மதியாக வாழ வழி விடுங்களென கெஞ்சிக் கேட்கின்றேன்...

இவ்வண்ணம்
சமுகப் பற்றுடையோன்...
ஷா மஜிட்

0 comments:

Post a Comment