November 28, 2018
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் மற்றும் உதவி பொலிஸ் அதிகாரிகள் 35 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் கிடைத்த அனுமதியின் படி இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இதேபோன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உதவி பொலிஸ் அதிகாரிகள் 50 பேருக்கு பொலிஸ் தலைமையகத்தினால் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததுடன் பொலிஸ் ஆணைக்குழுவினால் அவை இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment