Saturday, November 24, 2018

35 வயது அதிகமான பிரத்தானிய பெண்ணை மணந்த இலங்கையர்! பின் காத்திருந்த பேரதிர்ச்சி


24.4.2018

இலங்கையர் ஒருவரை பணக்கார பிரித்தானிய பெண் திருமணம் செய்த நிலையில் இலங்கையர் கொல்லப்பட்டதுடன், குறித்த பெண் அனைத்து பணத்தையும் இழந்து கடனாளியாகி சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் டயன் டீ (60). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா வந்த போது அந்நாட்டை சேர்ந்த பிரியஞ்சனா டீ ஜோய்சா (26) என்ற இளைஞரை சந்தித்துள்ளார்.

பின்னர் வயது வித்தியாசத்தை மீறி இருவரும் அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்னர் பிரியஞ்சனா ஏற்கனவே இளம் பெண்ணை திருமணம் செய்தவர் என டயனுக்கு தெரியவந்தது.

இதையடுத்து பிரியஞ்சனுக்காக அதிகளவில் பணத்தை டயன் செலவு செய்துள்ளார்கடந்த ஆண்டு பிரித்தானியாவில் உள்ள தனது வீட்டை விற்ற டயன் கொழும்பில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.

இதோடு £31,000 மதிப்புள்ள மினி பேருந்தையும் பிரியஞ்சனுக்காக வாங்கி கொடுத்துள்ளார். மொத்தமாக £90,000 வரை கணவருக்கு டயன் செலவு செய்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 30-ஆம் திகதி பிரியஞ்சனா அவர் நண்பர்கள் வீட்டில் சுட்டு கொல்லப்பட்டார்.பிரியஞ்சனா வசதியாக வாழ்வதை பார்த்த அவர் நண்பர்கள் பணத்துக்காக அவரை கொன்றுவிட்டதாக டயன் கூறுகிறார்.பிரியஞ்சனா, நண்பர்களுக்கு பணம் கொடுத்து வந்த நிலையிலும் அதிக பணத்துக்கு அவர்கள் ஆசைப்பட்டதாக டயன் தெரிவித்துள்ளார்.

டயன் கூறுகையில், என் மீதுள்ள காதலால் பிரியஞ்சனா என்னை மணக்கவில்லை என்பதை பின்னரே உணர்ந்தேன்.

பணத்துக்காக தான் என்னை அவர் திருமணம் செய்ய நினைக்கிறார் என எனது குடும்பத்தார் கூறியும் நான் முன்னர் கேட்கவில்லை.

நான் பிரியஞ்சனாவுடன் தங்கியபோது என்னை வீட்டில் அடைத்து வைத்து அவர் குடும்பத்தார் பணம் கேட்டு மிரட்டுவார்கள்.

தற்போது எல்லா பணத்தையும் இழந்துவிட்டு கடனாளியாக சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment