29.11.2018
சட்டப்பூர்வமான பிரதமர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன சட்டபூர்வமான பிரதமரின் கீழ் வருகின்றன.
தற்போது நாட்டின் சட்டபூர்வமான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமக்கு பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக அரசியல் யாப்பினையும், கட்சியின் தீர்மானங்களையும் மீறி செயற்பட முடியாது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment