Sunday, November 25, 2018

புனித மக்காவில் உம்ரா செய்துவிட்டு திரும்பிய 4 வயது சிறுவன் நடுவானில் வபாத்!

November 25, 2018 

தாய் தந்தையர் உள்ளிட்ட 11 குடும்ப உறுப்பினர்களுடன் உம்ரா செய்துவிட்டு திரும்பிய நிலையில் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை மாலை நடுவானில் 4 வயது கேரளச் சிறுவன் யஹ்யா அவர்களின் உயிர் பிரிந்தது, இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட் வழியாக காலிகட் விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த போது நடவானில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அபுதாபியில் விமானம் மிக அவசரமாக இறக்கப்பட்டது எனினும் அவர் இறந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவ வட்டாரங்கள் அறிவித்தன.

4 வயது யஹ்யா அவர்கள் பிறவியிலிருந்தே வலிப்பு நோய் பாதிப்பில் இருந்துள்ளார் மேலும் பேசும் திறனற்றும் இருந்துள்ளார் ஆனால் அனைவரையும் ஸ்நேகத்துடன் பார்த்து புன்னகை பூப்பாராம்.

யஹ்யாவுடைய உடலுடன் அவரது தந்தையும் அபுதாபியில் இறங்கிக் கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து அதே விமானத்தில் பறந்தனர். இரவோடு இரவாக சிறுவருடைய தூதரகம் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் சிறுவருடைய ஜனாஸாவை அவரது சொந்த ஊரான கன்னூர் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலையே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அன்னாரது பெற்றோர் உற்றோர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக! சிறுவரை ஜன்னத் அல் ஃபிர்தவ்ஸில் நுழையச் செய்வானாக!

Gulf News

0 comments:

Post a Comment