November 28, 2018
பணத்துக்கு பதவியை விலை பேசுகின்றவர்களுக்கும், ஊழல் மோசடியில் ஈடுபடுகின்றவர்களுக்கும் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயில் வேட்பாளராக போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் நிருவாகச் செயலாளர் ரேனுக பெரேரா தெரிவித்துள்ளார்.
மஹசோன் பலகாயவின் அமித் வீரசிங்கவுக்கும், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவுக்கும் பொதுஜன பெரமுனவில் ஒரு போதும் வாக்காளர் உரிமை வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தேர்தலில் நியமிப்பது பொதுஜன பெரமுனவின் கொள்கையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment