Wednesday, November 28, 2018

பாராளுமன்ற அமர்வில் நாளை கலந்துகொள்வது குறித்த தீர்மானம் நாளை காலை- தயாசிறி

November 28, 2018

பாராளுமன்ற நாளைய அமர்வில் அரசாங்க தரப்பு கலந்துகொள்வதா? இல்லையா? என்ற தீர்மானம் நாளை காலை எடுக்கப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை காலை கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை ரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நாளைய தினம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment