Sunday, November 25, 2018

மா பெரும் காட்டிக்கொடுப்பு: நானும் புத்தகம் எழுதப் போகிறேன்: ராஜித!


26.11.2018

ரணிலுடன் தோல்வியில் முடிந்த அரசியல் திருமணத்தைப் பற்றித் தான் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் மா பெரும் காட்டிக்கொடுப்பு எனும் தலைப்பில் தானும் நூலொன்றை எழுதவுள்ளதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.

கண்டியில் இடம்பெற்ற ஐ.தே.க கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், பெரும்பான்மைப் பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ச உடனடியாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மைத்ரியின் துரோகத்தை மையமாக வைத்து மாபெரும் அரசியல் காட்டிக் கொடுப்பு எனும் தலைப்பில் தான் விரைவில் புத்தகம் ஒன்றை வெளியிடப் போவதாக ராஜித சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment