Thursday, November 29, 2018

இறக்காமம் abc ஆங்கிலக் கற்கை நிலையத்தின் புதிய கிளைதிறப்பு விழாவும் புதிய வகுப்பு ஆரம்ப நிகழ்வும்

 

30.11.2018 (படங்கள்)

இறக்காமம் abc ஆங்கிலக் கற்கை நிலையத்தின் புதிய கிளைதிறப்பு விழாவும் புதிய வகுப்பு ஆரம்ப நிகழ்வும் நேற்று(29)
ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வுக்கு அதிதிகளாக சட்டத்தரணி எஸ் எல் பாறூக் சட்டக்கல்லூரி மாணவன் UPA அமைப்பாளர் K. சமீம் சமுர்த்தி முகாமையாளர் ஏ ஏல் நௌபீர்,  இறக்காமம் மத்தியஸ்தர் சபைஉறுப்பினரும் தினகரன் ,பத்திரிகை ஊடகவியலாளரும்மான ஹுஸைன்தீன் (ஆசிரியர்)மற்றும் முகிதீன்கிராம பள்ளிவாசல்  செயலாளர் ஏ எல் தாஜுர்  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர் இறக்காமம் வோய்ஸ் செய்தி இணையதள உரிமையாளர்
I.ஹுஸைன்றிஸ்வி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

முதலில் கல்வி நிலையத்தை இல்யாஸ் ஆசிரியரின் சகோதரான ஹுஸைன்தீன் ஆசிரியர்( கல்விமாணி) அவர்களால்கற்கைநிலையம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆங்கிலக்கற்கை நிலையத்தின் பணிப்பாளர்  இல்யாஸ் ஆசிரியாரால் உரையாற்றப்பட்டது. அவர் தமது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆங்கில மொழி வாசிப்பானது கற்கின்ற ஒரு வழிமுறை *வாசிப்பின் மூலம் மாணவன்(ஒருவன்) கற்றுக் கொள்கின்றான் *அறிவைப்பெற்றுக் கொள்கின்றான். அவனது விளக்கம் விருத்தியடைகிறது இவ்விருத்தியானது  பிள்ளையின் புத்திசார் விருத்தியில்  முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கில வாசிப்பானது புதிய அறிவைப் பெற்றுக்கொள்ளவும் , அனுபவத்தை விரிவாக்கிக்கொள்ளவும் ,ஆங்கிலக்கல்வி உதவுகிறது என்று
குறிப்பிட்டார் .

ஆங்கிலமொழி விருத்தியில் பிள்ளைகளை பாண்டித்தியமுடையவர்க்க
வேண்டும் .இக்கல்வி நிலையத்தின் மூலம் மாணவர் உச்சப்பயனடைய வேண்டும் என்றும்  நவீன உலகமயமாக்கல் கல்வியில் ஆங்கிலமொழியின் அவசியம் பற்றியும் வருகை தந்த அதிதிகளால் மாணவர்களுக்கு நல்லதொரு உதாரணங்கள் மூலம் மிகத் தெளிவாக உரையாற்றப்பட்டது.

இதே வேளை மாணவருக்கு செயற்பாட்டுரீதியான வாசிப்புக்கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும். ஆங்கில வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளைகள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்

01 பாடங்களை கற்க முடியாமை

02 பரீட்சையில் விடையளிக்க முடியாமை  

03கல்வியில் பின் தங்குதல் 

04 மனவெழுர்ச்சிப் பிரச்சினைகள்

போன்றன ஏற்பட்டு பிள்ளைக்கு   கல்வியில் வெறுப்பு ஏற்படும் பாடசாலையிலிருந்து பிள்ளை பின்னடையக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று கல்விமாணி ஹுஸைன்தீன் அவர்களால் உரையாற்றப்பட்டது.

மேலும் இன் நிகழ்விற்கு பெற்றோர் நலன்விரும்பிகள் மாணவர்கள் பொது மக்கள்என அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment