Saturday, November 24, 2018

அமித் 'இன்னும்' கட்சியில் சேரவில்லை: மஹிந்த பெரமுன!

24.11.2018

திகன வன்முறையின் சூத்திரதாரியும் பிரபல இனவாதியுமான அமித் வீரசிங்க மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையெனவும் குறித்த நபரை இன்னும் கட்சியில் சேர்க்கவில்லையெனவும் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது குறித்த கட்சி.

இப்போதோ, இதற்கு முன்னரோ குறித்த நபருக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்புகளும் இருந்ததில்லையென அக்கட்சியின் பேச்சாளர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திகன வன்முறையின் காரணகர்த்தாக்கள் பெரமுனவின் லொஹான் ரத்வத்தை மற்றும் திலும் அமுனுகம என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் லண்டனில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொலிஸ் உளவாளி நாலக சில்வாவும் பெரமுனவிலேயே இணைய உள்ளதாக தெரிவிக்கின்றமையும் இனவாதி அமித் வீரசிங்கவுக்கும் மஹிந்த பதவியேற்றதும் பிணை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Sonakar.com

0 comments:

Post a Comment