Wednesday, November 28, 2018

இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

November 28, 2018

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்படும் வரை, எதிர்வரும் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக இந்த நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைப் படி மொத்த செலவினமாக 1735 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment